நான் முதன்முதலில் எழுத ஆரம்பித்தது 'Soc.culture' ல். புனைப்பெயரில் தான் எழுதினேன். ஆனால், மருத்துவர் ஐயா (டாக்டர்.ஜெயபாரதி) வழி நடத்தும் "அகத்திய" யாஹீ குழுமத்தில் எழுத தொடங்கியப் பின் தான் வலைவுலகிற்கு என் பெயர் தெரிய வந்தது.
"அகத்தியம்" என்னுடைய குருகுலம் என்றால் அது மிகையாகாது. அங்கே நிறைய கற்றுக்கொண்டேன். அவ்வகையில் நான் டாக்டர் ஐயாவிற்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அகத்திய அன்பர்களுக்கும், ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.
எதிர்வரும் பின்னூட்டுகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று முதலில் அறிவுரை சொன்னவர் டாக்டர். யெஷ்வந்து மல்லையா அவர்கள் தான். (சமண வரலாற்றில் அவர் அறிவு பரந்துப்பட்டது.) கோபப்படாமல் "கூலாக" எழுத வேண்டும் என்றும் சொன்னார். இப்போது வரும் எதிர் பின்னூட்டுகளுக்கு கோபப்படுவதில்லை. பதிலாக பரிதாபமே மேலிடுகிறது.
இரா.பானுகுமார்,
சென்னை
3 comments:
ஐயா !
தட்டச்சு செய்யும் போடு 'ந' வருவதற்கு ஆங்கில 'n-' பயன்படுத்தினால், எழுத்து நடையில் 'ந' வரும்.
தாங்கள் தமிழில் பண்பட்டவர் போல் தெரிகிறது உங்கள் எழுத்து நடை.
வாழ்த்துக்கள் !
அன்பின் கண்ணன்,
தங்கள் பின்னூட்டுக்கு னன்றி. ekalapai தான் உபயோகிக்கிறேன். ஆனால் "ன" வரமாட்டேன் என்கிறது. வேறு வழியிருந்தால் கூறுங்களேன் ஐயா.
மற்றபடி, தொடந்துப் படித்து வாருங்கள்.
இரா.பானுகுமார்,
சென்னை.
Please use 'w' instead of 'n' to get the intended 'nakaram'.
Post a Comment